tag:blogger.com,1999:blog-18260391271522542472024-03-13T19:22:41.346-07:00தமிழில் கதைகள்தமிழ் சிறுகதைகள் , குழைந்தைகள் விரும்பக்கூடிய கதைகள், கருத்துள்ள கதைகள், சுவையான கதைகள் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய கதைகள் .
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-51725909953885033812017-07-23T06:14:00.000-07:002017-07-23T06:14:02.590-07:00இனிப்பா? உப்பா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvI/1-xa08KQ8foqssd9CoIXa3P-h5ib4D-bACPcBGAYYCw/s1600/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="467" height="153" src="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvI/1-xa08KQ8foqssd9CoIXa3P-h5ib4D-bACPcBGAYYCw/s320/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" width="320" /></a></div>
<center>
<b style="color: red;">இனிப்பா? உப்பா?</b></center>
<div style="text-indent: 2em;">
ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.</div>
<div style="text-indent: 2em;">
பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம். என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம் என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம்.</div>
<div style="text-indent: 2em;">
இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்! என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன.</div>
<a name='more'></a><br />
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
கரும்பு சொன்னது சர்கரையைப் பார்த்து நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட கல்யாணம் மற்றும் எல்லவைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்கரைப் பொங்களிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று தைரியம் கூறியது.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே சொல்கிறார்கள்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல்.</div>
<div style="text-indent: 2em;">
ஒரு தினம் பெரிய நாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்ஷன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சக்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிட்டக் கூடாதாம்.</div>
<div style="text-indent: 2em;">
அப்போது தான் புன் குணமாகுமாம் என்று என்று புலம்பினான் பெறியநாயகம்.</div>
<div style="text-indent: 2em;">
அதனாலென்ன இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி. இதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்கரையைப் பார்த்து இளித்தது. அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாக கூறினார் பெரிய நாயகம்.</div>
<div style="text-indent: 2em;">
அதைக் கேட்ட ராமலிங்கம் கண்ணீர் விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா. நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்து சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்பு சத்து அதிகரித்து விட்டதாம். உடன் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவே தவிர்க்க வேண்டுமாம் என வருந்தினார்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது. இனிப்பு உப்பைக் கூப்பிட்டு நம்மைப் பற்றி நமக்கே தலை கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப்பாடம் கற்பித்தார் என்றது. எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். என்பதையும் மருந்து போல் சாப்பிட்டால் விருந்து சாப்பிடலாம். விருந்து போல் சாப்பிட்டால் மருந்து தான் கதி.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-45662206994681524562017-07-23T06:08:00.003-07:002017-07-23T06:08:49.211-07:00ஆசையும் பேராசையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<center>
<b style="color: red;">ஆசையும் பேராசையும்</b></center>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvI/1-xa08KQ8foqssd9CoIXa3P-h5ib4D-bACPcBGAYYCw/s1600/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="467" height="153" src="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvI/1-xa08KQ8foqssd9CoIXa3P-h5ib4D-bACPcBGAYYCw/s320/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" width="320" /></a></div>
<div style="text-indent: 2em;">
ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார். ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? என்று கேட்டார்.அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார். ஆனாலும் அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.</div>
<a name='more'></a><br />
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
அப்படிப் பேசும் பொது ஒரு நாள் தெருநாய் சொல்லிற்று, "தினமும்'' இவர்கள் போடும் ரொட்டித்துண்டையே தின்கிறாயே சலிக்கவில்லையா. என்னைப் பார் தினமும் எத்தனை குப்பைத் தொட்டிகளில் விதவிதமான உணவைச் சாப்பிடுகிறேன். உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா? என்றது.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
அதற்கு அந்தப் பணக்கார நாய் எனக்கும் உன்னைப் போலவே விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான். அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. "என்றது" அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு? இந்த வீட்டு எஜமான் தன பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார். அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி அடுத்த தெரு நாராயணனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<br />
<center>
<b style="color: red;">அதனால் உனக்கென்ன?</b></center>
<br />
<div style="text-indent: 2em;">
அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார். இவளோ பிடிவாதமாக இருக்கிறாள் இன்று எஜமான் மகளிடம் கோபமாக இந்த நாய்க்கு உன்னைக் கட்டிவைத்தாலும் வைப்பேன் ஆனால் அந்த நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதுதான் காத்திருக்கிறேன் ''பெண்மிகவும் அழகாயிரூப்பாள்" என்றது.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
இப்போது புரிந்ததா?அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை ஆனால் நாய் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யநினைத்தது பேராசை என்று முடித்தார்.</div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படுவது தவறு என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியுள்ளார் அந்த ஞானி.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-39698711349920777962017-07-22T10:04:00.003-07:002017-07-22T10:04:36.039-07:00அறிவுத்திறனும், உடல் பலமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAvI/ujj85b3eHRIyESAP7QZLdGBED7Y8LneTgCPcBGAYYCw/s1600/oie_5weJ4FPU7hW1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="439" data-original-width="916" height="153" src="https://4.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAvI/ujj85b3eHRIyESAP7QZLdGBED7Y8LneTgCPcBGAYYCw/s320/oie_5weJ4FPU7hW1.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<center>
<b style="color: red;">அறிவுத்திறனும், உடல் பலமும்</b></center>
<div style="text-indent: 2em;">
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.</div>
<a name='more'></a><br />
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று? என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன? ரங்கன் சொன்னான் இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
முதலாளி சொன்னார் ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!..</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-31215716845683639852017-07-22T10:01:00.000-07:002017-07-22T10:04:52.299-07:00அறிவாளியும் முட்டளாவான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAvI/ujj85b3eHRIyESAP7QZLdGBED7Y8LneTgCPcBGAYYCw/s1600/oie_5weJ4FPU7hW1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="439" data-original-width="916" height="153" src="https://4.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAvI/ujj85b3eHRIyESAP7QZLdGBED7Y8LneTgCPcBGAYYCw/s320/oie_5weJ4FPU7hW1.jpg" width="320" /></a></div>
<center>
<b style="color: red;">அறிவாளியும் முட்டளாவான்</b></center>
<div style="text-indent: 2em;">
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம் என்றார். சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா? என்று கேட்டான்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார். முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான் என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்கஒருத்தர் சொன்னாரு, என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்னு. மறுத்த அடுத்தவர், வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்கன்னாரு.<br />
<a name='more'></a></div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வான்னாரு. சரிங்க அய்யான்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்கன்னாரு. கொஞ்சம் பொறுங்கன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்னான். அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வான்னாரு, உடனே பாத்துட்டு வர்றேன்னு அவனும் கிளம்பிட,பாத்திங்களா, என் ஆளன்னாரு. மொத ஆளு எப்பா உன் ஆளுதான் அருமைனு தோல்விய ஒத்துகிட்டாரு.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட, என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லன்னான். எப்படி சொல்றேன்னான் அடுத்தவன். பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே? இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமான்னான்.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்லன்னான். எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-966564361083464562017-07-21T08:17:00.002-07:002017-07-21T08:17:49.601-07:00புத்தியை தீட்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAu8/43zwi41e7HoHMsWzDc44b47MgavN6lrZQCPcBGAYYCw/s1600/oie_5weJ4FPU7hW1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="439" data-original-width="916" height="153" src="https://1.bp.blogspot.com/-sk6bdtV8RrY/WXIYFASHs-I/AAAAAAAAAu8/43zwi41e7HoHMsWzDc44b47MgavN6lrZQCPcBGAYYCw/s320/oie_5weJ4FPU7hW1.jpg" width="320" /></a></div>
<center>
<b style="color: red;">புத்தியை தீட்டு</b></center>
<div style="text-indent: 2em;">
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.....</div>
<a name='more'></a><br />
<div style="text-indent: 2em;">
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே! ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல்இருப்பது எப்படி என்று கேட்டான்! நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்....</div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்..</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
உங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாமே பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஷேர் செய்யுங்கள் ... அவர்களுக்கு பிடிக்கலாம்..</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-11698259898347320112017-07-21T08:13:00.002-07:002017-07-21T08:13:42.090-07:00மனம் தளராத எறும்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvA/aHQeHfegkQQrvXQYsHHI2uvlYEBREeHyACLcBGAs/s1600/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="467" height="153" src="https://3.bp.blogspot.com/-04aGWJ0DW5g/WXIaB2PBiEI/AAAAAAAAAvA/aHQeHfegkQQrvXQYsHHI2uvlYEBREeHyACLcBGAs/s320/oie_5weJ4FPU7hW1%2B%25281%2529.jpg" width="320" /></a></div>
<center>
<b style="color: red;">மனம் தளராத எறும்பு</b></center>
<div style="text-indent: 2em;">
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்....</div>
<a name='more'></a><br />
<div style="text-indent: 2em;">
அதாவது "ஓர்'' எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார்....</div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
பின் அவர்களிடம் அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்....</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-76622500403145289632017-07-21T06:24:00.001-07:002017-07-21T06:24:28.818-07:00வாக்கு மாறாத பசு உயிரை மாய்த்துக்கொண்ட புலி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-aC2oDYbdALo/WNozHVOw2hI/AAAAAAAAAuQ/JQ9AjlK6r1otxOdwdib1w_voIkQqpNMxwCPcBGAYYCw/s1600/ei12OYO8IYPS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="352" data-original-width="470" height="239" src="https://1.bp.blogspot.com/-aC2oDYbdALo/WNozHVOw2hI/AAAAAAAAAuQ/JQ9AjlK6r1otxOdwdib1w_voIkQqpNMxwCPcBGAYYCw/s320/ei12OYO8IYPS.png" width="320" /></a></div>
<center>
<b style="color: red;">வாக்கு மாறாத பசு உயிரை மாய்த்துக்கொண்ட புலி</b></center>
<div style="text-indent: 2em;">
காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன. அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது.</div>
<div style="text-indent: 2em;">
</div>
<a name='more'></a><br /><br />
<div style="text-indent: 2em;">
புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக. புலி சொன்னது. நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா? புண்யகோடி உருக்கமாகச் சொன்னது. புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு.</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்குபசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு. அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்....</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும் என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன. புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்கமாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு...</div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<div style="text-indent: 2em;">
<br /></div>
<b style="font-family: sans-serif; font-size: 15px; line-height: 30px; text-align: justify;"></b><br />
<div style="text-indent: 2em;">
புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன....</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-58067429867725330852017-04-03T08:34:00.000-07:002017-04-03T08:34:08.782-07:00பொறாமையால் ஏற்பட்ட இழப்பு........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-P8HDxXVqIU4/WNQKdHsw1rI/AAAAAAAAAt4/4PeHQUHdMlI_p5k1w15ZcuSudtBJpvJKACPcB/s1600/oie_21224832LM5Vgp3M.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://1.bp.blogspot.com/-P8HDxXVqIU4/WNQKdHsw1rI/AAAAAAAAAt4/4PeHQUHdMlI_p5k1w15ZcuSudtBJpvJKACPcB/s320/oie_21224832LM5Vgp3M.jpg" width="320" /></a></div>
பொறாமையால் ஏற்பட்ட இழப்பு........<br />
மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.<br />
<br />
கதை :<br />
கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.<br />
<br />
ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.<br />
<a name='more'></a><br />
<br />
மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.<br />
<br />
இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.<br />
<br />
ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.<br />
<br />
மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.<br />
<br />
நீதி :<br />
பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-52805091546387125552017-03-28T02:56:00.001-07:002017-03-28T02:56:02.465-07:00பஞ்சவர்ண கிளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-aC2oDYbdALo/WNozHVOw2hI/AAAAAAAAAuM/1dmXqS3VgU8ZwfNFtyXEgXnor6MMTfAfQCLcB/s1600/ei12OYO8IYPS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://4.bp.blogspot.com/-aC2oDYbdALo/WNozHVOw2hI/AAAAAAAAAuM/1dmXqS3VgU8ZwfNFtyXEgXnor6MMTfAfQCLcB/s320/ei12OYO8IYPS.png" width="320" /></a></div>
<br />
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br />
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
பஞ்சவர்ண கிளி</div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
நீண்ட காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. <a name='more'></a></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
நீதி :</div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும். </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-50662083728802069432017-03-28T02:53:00.002-07:002017-03-28T02:53:29.012-07:00புள்ளிமான்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-H9vqaDVEk44/WNoyiU0x0eI/AAAAAAAAAuE/Tx4m_3UH-1E4zvHdW4FKO3r1LwQeesjnQCLcB/s1600/eiMTDJL7RKML.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://2.bp.blogspot.com/-H9vqaDVEk44/WNoyiU0x0eI/AAAAAAAAAuE/Tx4m_3UH-1E4zvHdW4FKO3r1LwQeesjnQCLcB/s320/eiMTDJL7RKML.png" width="320" /></a></div>
<span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">புள்ளிமான்கள்</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;"> ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணை பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தே தான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்றுபஞ்சவர்ண கிளி</span><br />
<a name='more'></a><br />
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
நீண்ட காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
நீதி :</div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும். </div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br />
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
<div dir="auto" style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-49922146337993668962017-03-23T10:48:00.002-07:002017-03-23T10:48:46.730-07:00புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-P8HDxXVqIU4/WNQKdHsw1rI/AAAAAAAAAt0/s7zvsLyWzcUBEzlubaktmNjiZO4bVt2WACLcB/s1600/oie_21224832LM5Vgp3M.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://1.bp.blogspot.com/-P8HDxXVqIU4/WNQKdHsw1rI/AAAAAAAAAt0/s7zvsLyWzcUBEzlubaktmNjiZO4bVt2WACLcB/s320/oie_21224832LM5Vgp3M.jpg" width="320" /></a></div>
புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்...<br />
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.<br />
<br />
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.<br />
<br />
புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.<br />
<a name='more'></a><br />
<br />
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.<br />
<br />
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.<br />
<br />
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.<br />
<br />
புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார்.<br />
<br />
மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.<br />
<br />
புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.<br />
<br />
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.<br />
<br />
பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.<br />
<br />
1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.<br />
<br />
10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.<br />
<br />
20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.<br />
<br />
பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.<br />
<br />
விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.<br />
<br />
புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.<br />
<br />
இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.<br />
<br />
நீதி<br />
<br />
கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-79699173727742290402017-03-22T04:14:00.002-07:002017-03-22T04:14:55.695-07:00அழகு ராணி ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-QDtPNV3jtNA/WNJcoyiwOVI/AAAAAAAAAtg/3uEAYq4lf-4v8TwOhnXFvGPByGnP07FJQCLcB/s1600/oie_21224914vRNWBLBj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://2.bp.blogspot.com/-QDtPNV3jtNA/WNJcoyiwOVI/AAAAAAAAAtg/3uEAYq4lf-4v8TwOhnXFvGPByGnP07FJQCLcB/s320/oie_21224914vRNWBLBj.jpg" width="320" /></a></div>
அழகு ராணி ...ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.<br />
<br />
`நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.<br />
<a name='more'></a><br />
<br />
`நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!' என்றது எலி.<br />
<br />
`மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.<br />
<br />
`நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.<br />
<br />
`என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!' குரங்கு சொல்லியது.<br />
<br />
`ஆமாம்... ஆமாம்...!' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.<br />
<br />
`நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்' என்றது எலி.<br />
<br />
`எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?' கேட்டது வெட்டுக்கிளி.<br />
<br />
`போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?' சந்தேகம் எழுப்பியது எலி.<br />
<br />
`நடுவராக நானிருக்கிறேன்!' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.<br />
<br />
`நீங்கள் எப்படி?' ஆச்சரியப்பட்டது குரங்கு.<br />
<br />
`நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!' என்று காகம் தன் முகவரி கூறியது.<br />
<br />
`அப்படியே செய்கிறோம்...' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.<br />
<br />
மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.<br />
<br />
அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.<br />
<br />
`எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!' குருவி பல கீனமாக உதவி கேட்டது.<br />
<br />
`நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!' கடுமையாக கூறியது குரங்கு.<br />
<br />
குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.<br />
<br />
அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.<br />
<br />
`அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.<br />
<br />
அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.<br />
<br />
`முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.<br />
<br />
நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுவது தான் ! அப்துல் கலாம் ...</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-10851507131822666872017-03-20T06:26:00.000-07:002017-03-20T06:26:18.659-07:00தலையில் விழுந்த பழம்! [இறைவனின் படைப்பில் எல்லாமே அதிசயம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-gPslCTKQup4/WMcbHesjI8I/AAAAAAAAAtE/8-nOqonj7iYmNQcym-AtJWYiwc9J1zs4QCPcB/s1600/oie_pUfP3eWBCowl.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://2.bp.blogspot.com/-gPslCTKQup4/WMcbHesjI8I/AAAAAAAAAtE/8-nOqonj7iYmNQcym-AtJWYiwc9J1zs4QCPcB/s320/oie_pUfP3eWBCowl.jpg" width="320" /></a></div>
தலையில் விழுந்த பழம்! [இறைவனின் படைப்பில் எல்லாமே அதிசயம்! நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.<br />
<br />
ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.<br />
<br />
மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.<br />
<a name='more'></a><br />
<br />
அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.<br />
<br />
அவன் உரக்கச் சிரித்தான்.<br />
<br />
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.<br />
<br />
கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.<br />
<br />
கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.<br />
<br />
இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.<br />
<br />
முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.<br />
<br />
சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.<br />
<br />
சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.<br />
<br />
முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.<br />
<br />
ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.<br />
<br />
கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.<br />
<br />
வழிப்போக்கன் யோசித்தான்.<br />
<br />
நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.<br />
<br />
இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.<br />
<br />
ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.<br />
<br />
கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.<br />
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-25676367447129239812017-03-14T08:57:00.000-07:002017-03-14T08:57:12.522-07:00பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-OodQcJJOdcE/WMgSs1Xt6GI/AAAAAAAAAtM/XT6HDc2l6HsG_7eRWonn4jNKykS1eL5jwCLcB/s1600/oie_R43TubNPhVDy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://3.bp.blogspot.com/-OodQcJJOdcE/WMgSs1Xt6GI/AAAAAAAAAtM/XT6HDc2l6HsG_7eRWonn4jNKykS1eL5jwCLcB/s320/oie_R43TubNPhVDy.jpg" width="320" /></a></div>
பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய் !<br />
ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.<br />
<br />
ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.<br />
<br />
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.<br />
<br />
கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.<br />
<a name='more'></a><br />
<br />
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.<br />
<br />
நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது<br />
<br />
நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..<br />
<br />
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.<br />
<br />
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.<br />
<br />
நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.<br />
<br />
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.<br />
<br />
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.<br />
வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் !</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-67233855792844020762017-03-13T15:20:00.002-07:002017-03-13T15:20:43.310-07:00உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-gPslCTKQup4/WMcbHesjI8I/AAAAAAAAAs8/FniSm9UvQpYrAFIK25zNDt4dI2rymdqNQCLcB/s1600/oie_pUfP3eWBCowl.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://1.bp.blogspot.com/-gPslCTKQup4/WMcbHesjI8I/AAAAAAAAAs8/FniSm9UvQpYrAFIK25zNDt4dI2rymdqNQCLcB/s320/oie_pUfP3eWBCowl.jpg" width="320" /></a></div>
உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும் ...<br />
<br />
<span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.</span><br />
<a name='more'></a><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-36336489060887295212017-03-13T04:42:00.001-07:002017-03-13T04:42:17.802-07:00செயற்குரிய சாதனை !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-_h5MJ55mpAg/Vk7zUQk1U3I/AAAAAAAAAoI/e96pBsvLxxceFEE7y9DmDlPP0CnVMoYNACPcB/s1600/983338-bigthumbnail.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="282" src="https://2.bp.blogspot.com/-_h5MJ55mpAg/Vk7zUQk1U3I/AAAAAAAAAoI/e96pBsvLxxceFEE7y9DmDlPP0CnVMoYNACPcB/s320/983338-bigthumbnail.jpg" width="320" /></a></div>
<br />
<br />
செயற்குரிய சாதனை !<br />
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.<br />
<br />
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.<br />
<br />
அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான்.<br />
<a name='more'></a><br />
<br />
” மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்” என்றார் முல்லா.<br />
<br />
” அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?” என்று முரடன் கேட்டான்.<br />
<br />
” உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார்.<br />
<br />
” என்ன சிரிக்கிறீர் ” என்று முரடன் கேட்டான்.<br />
<br />
” அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் ” என்றார் முல்லா.<br />
<br />
” தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?” என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.<br />
<br />
முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.<br />
<br />
” நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் ” என்றார் முல்லா.<br />
<br />
” முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்” என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.<br />
<br />
” அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் ” என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-75759849754689922242015-12-30T06:53:00.002-08:002015-12-30T06:53:50.452-08:00யானைக்கு வந்த திருமண ஆசை ......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-SB8ffAJamNw/Vk40fzmAF6I/AAAAAAAAAn8/6DISsY4qhAg/s1600/hqdefault-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-SB8ffAJamNw/Vk40fzmAF6I/AAAAAAAAAn8/6DISsY4qhAg/s320/hqdefault-6.jpg" width="320" /></a></div>
யானைக்கு வந்த திருமண ஆசை ......<br />
<span style="font-family: sans-serif; widows: auto;">மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.</span><br />
<a name='more'></a><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. </span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /><br style="font-family: sans-serif; widows: auto;" /><span style="font-family: sans-serif; widows: auto;">முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.</span><br style="font-family: sans-serif; widows: auto;" /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-63573658773916042022015-11-23T06:28:00.000-08:002015-11-23T06:28:17.828-08:00பரமார்த்தரின் பக்தி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;"><i>பரமார்த்தரின் பக்தி</i></span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;"><i>பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.<br /><br />பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.<br /><br />"குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.</i></span><br />
<a name='more'></a><i><br /><br />நல்லது! அப்படியே செய்வோம்" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.<br /><br />தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன்.<br /><br />அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.<br /><br />உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.<br /><br />நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.<br /><br />"மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்<br />மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.<br /><br />அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. "அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார்.<br /><br />அப்போது மடையன் மட்டும் அலறினான்<br /><br />"என்ன? என்ன?" என்று பதறினார் குரு.<br /><br />"குளிர்கிறதே" என்றான் மடையன்.<br /><br />"அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்" என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.<br /><br />குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.<br /><br />அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.<br /><br />அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.<br /><br />அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, "குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சு வாங்கக் கூறினான்.<br /><br />"அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்ற பரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்" என்றபடி இறங்கினார்.<br /><br />எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.<br /><br />அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார்.<br /><br />வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.<br /><br />அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.<br /><br />ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், "அதோ...அதோ.. பிடியுங்கள்" என்று கத்தினான்.<br /><br />பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.<br /><br />வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, "அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர்.<br /><br />"எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்" என்று நடுங்கியபடி கூறினர்.<br /><br />பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.<br /><br />உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார்.<br /><br />மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.<br /><br />குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது</i></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-40469443291704169062015-11-23T03:08:00.002-08:002015-11-23T03:08:31.363-08:00ஆசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-EG61u6O--JM/VT-lMnYhFQI/AAAAAAAAALg/F6F5WmqyccM/s1600/6TyXjyeRc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-EG61u6O--JM/VT-lMnYhFQI/AAAAAAAAALg/F6F5WmqyccM/s320/6TyXjyeRc.jpg" width="208" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;">ஆசை</span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;">மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.<br /><br />மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.<br /><br />இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.</span><br />
<a name='more'></a><br /><br />பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது.<br /><br />பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.<br /><br />மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.<br /><br />வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.<br /><br />"நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்" என்று கேட்டார் அவன் மாமா.<br /><br />"நான் படித்து கலெக்டராக வருவேன்" என்றான் மணிவண்ணன்.<br /><br />இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா "தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்" என்றார்.<br /><br />மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.<br /><br />"ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?" என்று நினைத்தான்.<br /><br />வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.<br /><br />பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.<br /><br />ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.<br /><br />"ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா" என்றான்.<br /><br />அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். "இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்" என்றார்.<br /><br />அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது.<br /><br />ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.<br /><br />மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.<br /><br />கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர்,<br /><br />"உன் சந்தேகத்தை அவரிடமே கேள்" என்றார்.<br /><br />முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான்.<br /><br />"ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா?"<br /><br />"நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை" என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.<br /><br />"நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்"<br /><br />"உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது" என்று பேசி முடித்தார் கலக்டர்.<br /><br />இருபது ஆண்டுகள் கழிந்தன.<br /><br />அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.<br /><br />"நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது" என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-71472313609759584042015-11-23T03:04:00.001-08:002015-11-23T03:04:33.374-08:00சாகாத வரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-2nZxa0ABoz4/VUobguhLoLI/AAAAAAAAAXg/MsNFiLHF_M4/s1600/oie_9svmH2HZhBGR.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="292" src="http://3.bp.blogspot.com/-2nZxa0ABoz4/VUobguhLoLI/AAAAAAAAAXg/MsNFiLHF_M4/s400/oie_9svmH2HZhBGR.png" width="400" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;">சாகாத வரம்</span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;">வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது.<br /><br />வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும்.<br /><br />முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள்.<br /><br />இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான்.<br /><br />அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர்.</span><br />
<a name='more'></a><br /><br />முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.<br /><br />பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.<br /><br />அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.<br /><br />அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை.<br /><br />தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்.<br /><br />"என்ன நடந்தது...?" என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து.<br /><br />"இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார்.<br /><br />முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்.<br /><br />"காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர்.<br /><br />"என்ன நடந்தது......" என்று கேட்டனர்.<br /><br />எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான்.<br /><br />தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர்.<br /><br />பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.<br /><br />அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர்.<br /><br />தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.<br /><br />"உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.<br /><br />தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்.<br /><br />"கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம்.<br /><br />"நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம்.<br /><br />ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.<br /><br />கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.<br /><br />"நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்.<br /><br />"சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.<br /><br />"கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.<br /><br />இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.<br /><br />வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம்.<br />யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.<br /><br />சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-51865280451224283952015-11-23T02:59:00.000-08:002015-11-23T02:59:00.957-08:00வெள்ளை யானை பறக்கிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-kMxRLv1nOrU/Vk4yxW7k3PI/AAAAAAAAAno/7a_mHOOjFIg/s1600/x240-S7D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-kMxRLv1nOrU/Vk4yxW7k3PI/AAAAAAAAAno/7a_mHOOjFIg/s1600/x240-S7D.jpg" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;">வெள்ளை யானை பறக்கிறது</span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;">மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.<br /><br />வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.<br /><br />குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.</span><br />
<a name='more'></a><br /><br />தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.<br /><br />குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.<br /><br />உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!<br /><br />கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.<br /><br />குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.<br /><br />ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.<br /><br />ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.<br /><br />ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.<br /><br />பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.<br /><br />அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.<br /><br />ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.<br /><br />பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.<br /><br />நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.<br /><br />அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.<br /><br />கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.<br /><br />பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.<br /><br />குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.<br /><br />ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.<br /><br />இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.<br /><br />குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.<br /><br />எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.<br /><br />மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.<br /><br />திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.<br /><br />தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.<br /><br />ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.<br /><br />தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.<br /><br />இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.<br /><br />உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.<br /><br />இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!<br /><br />சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.<br /><br />தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-8598876892136896412015-11-22T06:59:00.001-08:002015-11-22T06:59:22.589-08:00இரண்டு புலிக்கு எங்கே போவேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-SB8ffAJamNw/Vk40fzmAF6I/AAAAAAAAAn8/6DISsY4qhAg/s1600/hqdefault-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-SB8ffAJamNw/Vk40fzmAF6I/AAAAAAAAAn8/6DISsY4qhAg/s320/hqdefault-6.jpg" width="320" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;">இரண்டு புலிக்கு எங்கே போவேன்?</span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;">ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.<br /><br />பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.<br /><br />தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.<br />அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.</span><br />
<a name='more'></a><br /><br />ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.<br /><br />அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.<br /><br />சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.<br />நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.<br /><br />இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.<br /><br />குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.<br /><br />இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.<br />ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.<br /><br />தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.<br /><br />பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.<br /><br />நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.<br /><br />இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.<br />அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.<br /><br />அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.<br /><br />தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.<br /><br />இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.<br />மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.<br /><br />கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.<br /><br />இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.<br />அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.<br /><br />நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.<br />உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.<br /><br />வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.<br /><br />பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-75114096113209358392015-11-22T06:54:00.001-08:002015-11-22T06:54:40.297-08:00மனிதனுக்கு கிடைத்த ஆயுள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-3xtuyTwwHHs/VlHXHhf28NI/AAAAAAAAAok/YUQ7h16WjhE/s1600/d31931fdd47f80ce4099139212785ab5_large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-3xtuyTwwHHs/VlHXHhf28NI/AAAAAAAAAok/YUQ7h16WjhE/s320/d31931fdd47f80ce4099139212785ab5_large.jpg" width="284" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;">மனிதனுக்கு கிடைத்த ஆயுள்</span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;">எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.<br />தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.<br /><br />அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.<br /><br />கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.<br /><br />முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.</span><br />
<a name='more'></a><br /><br />கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.<br /><br />சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.<br /><br />இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.<br /><br />அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.<br /><br />கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.<br />உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.<br /><br />மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.<br /><br />குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.<br /><br />பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.<br /><br />இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.<br /><br />குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.<br /><br />உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.<br /><br />கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.<br />நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.<br /><br />இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.<br /><br />மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.<br /><br />கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-42126460252723678112015-11-21T13:10:00.000-08:002015-11-21T13:10:05.109-08:00கடவுளின் முட்டாள்தனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-MnYDxIy6-3s/VlDdkWONIaI/AAAAAAAAAoU/i4XatNgC2xA/s1600/the-money-tree-retirement.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="281" src="http://4.bp.blogspot.com/-MnYDxIy6-3s/VlDdkWONIaI/AAAAAAAAAoU/i4XatNgC2xA/s320/the-money-tree-retirement.jpeg" width="320" /></a></div>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;"><span style="color: blue;">கடவுளின் முட்டாள்தனம்</span></span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;"><span style="color: blue;">நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.<br /><br />ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.</span></span><br />
<a name='more'></a><span style="color: blue;"><br /><br />மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.<br /><br />அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.<br /><br />அவன் உரக்கச் சிரித்தான்.<br /><br />முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.<br /><br />கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.<br /><br />கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.<br /><br />இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.<br /><br />முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.<br /><br />சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.<br /><br />சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.<br /><br />முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.<br /><br />ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.<br /><br />கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.<br /><br />வழிப்போக்கன் யோசித்தான்.<br /><br />நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.<br /><br />இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.<br /><br />ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.<br /><br />கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1826039127152254247.post-69127567608752357202015-11-21T04:50:00.001-08:002015-11-21T04:50:19.290-08:00சம பங்கு !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-MuKFTXC9ymE/Vdnlu8qZMnI/AAAAAAAAAlg/jrwPh314jvI/s1600/kulanthai-kathaigal-400x400-imadzr2rcmwmg98d.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: blue;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-MuKFTXC9ymE/Vdnlu8qZMnI/AAAAAAAAAlg/jrwPh314jvI/s320/kulanthai-kathaigal-400x400-imadzr2rcmwmg98d.jpeg" width="228" /></span></a></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<h2 style="font-family: sans-serif; widows: auto;">
<span style="font-size: 22px;"><span style="color: blue;">சம பங்கு</span></span></h2>
<span style="font-family: sans-serif; font-size: 18px; widows: auto;"><span style="color: blue;">ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.<br /><br />இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.</span></span><br />
<a name='more'></a><span style="color: blue;"><br /><br />இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.<br /><br />நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.<br /><br />வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்<br />மசியவில்லை.<br /><br />இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.<br /><br />அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.<br /><br />ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.<br /><br />அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.<br /><br />இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.<br /><br />இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.<br /><br />ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.<br /><br />உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.<br /><br />அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.<br /><br />அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13382351463239871980noreply@blogger.com0