Sunday, July 23, 2017

ஆசையும் பேராசையும்

ஆசையும் பேராசையும்
ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார். ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? என்று கேட்டார்.அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார். ஆனாலும் அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.


அப்படிப் பேசும் பொது ஒரு நாள் தெருநாய் சொல்லிற்று, "தினமும்'' இவர்கள் போடும் ரொட்டித்துண்டையே தின்கிறாயே சலிக்கவில்லையா. என்னைப் பார் தினமும் எத்தனை குப்பைத் தொட்டிகளில் விதவிதமான உணவைச் சாப்பிடுகிறேன். உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா? என்றது.

அதற்கு அந்தப் பணக்கார நாய் எனக்கும் உன்னைப் போலவே விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான். அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. "என்றது" அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு? இந்த வீட்டு எஜமான் தன பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார். அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி அடுத்த தெரு நாராயணனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்.


அதனால் உனக்கென்ன?

அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார். இவளோ பிடிவாதமாக இருக்கிறாள் இன்று எஜமான் மகளிடம் கோபமாக இந்த நாய்க்கு உன்னைக் கட்டிவைத்தாலும் வைப்பேன் ஆனால் அந்த நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதுதான் காத்திருக்கிறேன் ''பெண்மிகவும் அழகாயிரூப்பாள்" என்றது.

இப்போது புரிந்ததா?அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை ஆனால் நாய் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யநினைத்தது பேராசை என்று முடித்தார்.

ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படுவது தவறு என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியுள்ளார் அந்த ஞானி.

No comments:

Post a Comment

தமிழ் சிறுகதைகள் , குழைந்தைகள் விரும்பக்கூடிய கதைகள், கருத்துள்ள கதைகள், சுவையான கதைகள் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய கதைகள் .