Saturday, July 22, 2017

அறிவாளியும் முட்டளாவான்

அறிவாளியும் முட்டளாவான்
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம் என்றார். சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா? என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார். முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான் என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்கஒருத்தர் சொன்னாரு, என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்னு. மறுத்த அடுத்தவர், வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்கன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வான்னாரு. சரிங்க அய்யான்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்கன்னாரு. கொஞ்சம் பொறுங்கன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்னான். அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வான்னாரு, உடனே பாத்துட்டு வர்றேன்னு அவனும் கிளம்பிட,பாத்திங்களா, என் ஆளன்னாரு. மொத ஆளு எப்பா உன் ஆளுதான் அருமைனு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட, என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லன்னான். எப்படி சொல்றேன்னான் அடுத்தவன். பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே? இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமான்னான்.


அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்லன்னான். எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..

No comments:

Post a Comment

தமிழ் சிறுகதைகள் , குழைந்தைகள் விரும்பக்கூடிய கதைகள், கருத்துள்ள கதைகள், சுவையான கதைகள் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய கதைகள் .